×

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாட்டு மீனவக் கப்பலை விரட்டி பிடிக்க முயற்சித்தபோது மூழ்கிப்போன கப்பலில் காணாமல் போன மீனவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார்.அதில் கூறியுள்ளதாவது: கடந்த 18ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களின் மீன்பிடிக் கப்பலை இலங்கை கடற்படையினர் துரத்தியபோது மூழ்கியது, அதிலிருந்து 3 மீனவர்களில் 2 மீனவர்கள் காப்பாற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு மீனவரை தேடும் பணி 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட இரண்டு மீனவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடவும், காணாமல்    இதுபோன்ற துயர சம்பவங்கள் நீண்டகாலமாக தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Foreign Minister , Chief Minister MK Stalin's letter to the Foreign Minister to find a permanent solution to the fishermen's problem
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...