×

கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி நிவாரண நிதி: திமுக எம்பிக்கள் நேரில் வழங்கினர்

சென்னை: கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, கேரள மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளைச் சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என திமுக அறக்கட்டளை தலைவரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் ப.செல்வராஜ் எம்பியும், செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பியும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள மாநில முதல்வருக்கு எழுதிய கடிதத்தையும், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையையும் அளித்தனர். அப்போது, கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேசன் உடனிருந்தார்.

Tags : DMK Foundation ,Kerala ,Chief Minister ,Relief ,DMK , DMK Foundation donates Rs 1 crore to Kerala Chief Minister's Relief Fund: DMK MPs in person
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...