மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன் கானுக்கு மீண்டும் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உள்பட பலர் போதை மருந்து பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை மருந்து கேளிக்கை விருந்தில் பங்கேற்றதாக ஆர்யன் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.