மதுரை: நீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி தர தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து குறித்து வாக்குறுதி தர தடை கோரிய ராமேஸ்வரத்தை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில் தேசிய தேர்வுகள் முகாமையும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.