சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த வித அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோதே பகிரங்கமாக குற்றசாட்டுகள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.