×

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: திருச்சி, தஞ்சை, கடலூர் உள்பட 12 மாவட்டங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்படும்  என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 6 மாத காலத்துக்கு தொடர்ந்து இல்லம் தேடி கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்றல் இடைவெளியை குறைக்க இல்லம் தேடி கல்வித் திட்டம் உதவும். வரும் நவம்பர் ஒன்றாம் தேதி நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


Tags : Tiruchi ,Thanjai ,Minister ,Love Makesh , Educational Program
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு