செய்யாறு: செய்யாறு அண்ணா நகர் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 12 பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 100 நாள் வேலைக்கு சென்று திரும்பிய போது அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வராததால் 12 பெண்களை லோடு ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி உள்ளனர்.