×

செல்பி எடுத்தபோது பாலாற்றில் மூழ்கி ஒருவர் பலி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த வீரானத்தூர் காலனியைச் சேர்ந்தவர் சிவா(45). தனது நண்பர்களுடன் நேற்று கிராமத்திற்கு அருகில் உள்ள பாலாறு தரைப்பாலத்திற்கு சென்றார். அப்போது, ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தரைப்பால கரைப்பகுதியில் நின்றபடியே நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் இடறி ஆற்றில் திடீரென விழுந்தார். இதில் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். நீரில் அவர் மூழ்கியதை கண்ட அங்கிருந்தவர்கள் போராடி அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, செல்லும் வழியில் சிவா பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Selby , Selby, milk, kill
× RELATED செல்பி படங்களை பார்த்து போடுங்க…மாணவிகளுக்கு சவுமியா ‘அட்வைஸ்’