×

ஸ்ரீதேவி, பூதேவி கல்யாண உற்சவம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஜெயா நகரில் உள்ள ஸ்ரீமஹாவல்லப கணபதி ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமை 5ம் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் சங்கல்பம், விஷ்வக்சேனர் ஆராதனம், புண்யாஹ வாசனம், அங்குரார்பணமும், அக்னி பிரதிஷ்டை மற்றும் மாலை மாற்றலும் நடைபெற்றது.

பின்னர் மாலை 6.30 மணியளவில் திருமாங்கல்யதாரணமும், பூர்ணாஹூதியும், 7 மணியளவில் சீர்பாடல் மங்களார்த்தியும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிரசாத விநியோகம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை கனகம்மாசத்திரம் பார்த்தசாரதி பட்டாச்சாரியார் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags : Sridevi ,Bhudevi Wedding , Sridevi, Bhudevi, Kalyana Utsavam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வசந்த உற்சவம்..!!