சென்னை: சீமானின் நாம் தமிழர் கட்சி சனாதனவாதிகளுக்கு துணைபோவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். சீமான் எங்களுக்கானவர் என ஆர்எஸ்எஸ் கூறுவதுபோல் அவரது செயல்பாடு மாறிவிட்டது. சனாதன சக்திகளுக்கு துணைபோகும் அரசியலை கையில் எடுக்க வேண்டாம் என சீமானை கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.