சென்னை: அதிமுக கட்சியின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.