சென்னை: கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வந்த போது 20 பேரிடம் ரூ.93,000, 5 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது. பணம், செல்போனை பறிகொடுத்த 20 பேர் அளித்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.