தென்காசி: தென்காசியில் பெய்த கனமழையால் பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் கிராமம் கழிவு நீரால் சூழ்ந்தது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தொற்று பரவலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க ஆவுடையானூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.