சென்னை: அதிமுக-வையும் தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், என் வயதில் முக்கால் பகுதி ஜெயலலிதாவுடன் இருந்தேன். இத்தனை ஆண்டுகளாக என் மனதில் உள்ள பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்தேன் என்று குறிப்பிட்டார்.