×

இபிஎஸ், ஓபிஎஸ் அறிக்கை அமைச்சர் கண்டனம்

சென்னை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கான இடைத்தேர்தல்கள் தமிழக தேர்தல் ஆணையத்தால் சிறப்பான முறையில் திட்டமிட்டு, நடுநிலையோடு, தேவையான பாதுகாப்பு வசதிகளோடு எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடத்தப்பட்டு 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

தமிழக மக்கள் தந்த அந்த மகத்தான வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தந்த அறிக்கையில் தேர்தலை, ஜனநாயக முறையில் நேர்மையாக, நடுநிலையோடு, நடத்திய தமிழகத் தேர்தல் ஆணையத்தையும், கொச்சைப் படுத்துகின்ற வகையில் வெளியிட்டுள்ள அவர்களின் கற்பனை அறிக்கைக்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


Tags : Minister ,EPS ,OPS , Minister condemns EPS, OPS report
× RELATED வேட்பாளர் படிவங்களில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்...