சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,245 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சிகிச்சை பலனின்றி 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,245 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 1,442 பேர் குணமடைந்து திரும்பினர். கொரோனாவிற்கு 12 பேர் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 35,869 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.