×

எம்எல்ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி 4 கோடியாக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் 288 எம்எல்ஏக்கள் மற்றும் நியமன உறுப்பினர்கள் தவிர, 62 எம்எல்சி உறுப்பினர்கள் உள்ளனர்.  இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக 3 கோடி வழங்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:மகாராஷ்டிராவில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்எல்சிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக இதுவரை 3 கோடி வழங்கப்பட்டு வந்தது. இதனை 4 கோடியாக உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தசரா பரிசாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 350 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதாவது, ஆண்டுக்கு 1,400 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : For MLAs 4 crore increase in block development fund
× RELATED சின்னங்கள் பொருத்தும் எந்திரங்களை மே...