சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் மனிதநேய பணிக்கான விருது சிங்கப்பூர் வாழ் தமிழ்நாட்டுப் பெண் நாஷ்ஹத் பஹீமா என்பவருக்கு வழங்கப்பட்டது. மதம், இன வெறி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக இவ்விருது வழங்கப்பட்டதாகவும், நாஷ்ஹத் தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.