×

காதல் விவகாரத்தில் மோதல்: துப்பாக்கி காட்டி மிரட்டல் 4 பேர் கைது

கோவை: கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை அருகே அன்னூரை அடுத்த பொகலூரை சேர்ந்தவர் கருப்புசாமி (48). கார்பென்டர். இவரது மகன் கார்த்திக் (28). அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் தொடர்பு வைப்பதில் கார்த்திக்கிற்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமாருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் கருப்புசாமியும், கார்த்திக்கும் ரோட்டோரம் நின்றிருந்தனர். அங்கு வந்த சதீஷ்குமாரின் தந்தை வெள்ளிங்கிரி (53), கார்த்திக்கிடம் கள்ளக்காதல் வைத்து கொண்டு என் வீட்டு பக்கம் சுற்றிக்கொண்டிருக்கிறாயா? என்று கூறி மிரட்டியுள்ளார்.

உடனே கருப்புசாமி அவரை  தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த வெள்ளிங்கிரி, தகாத வார்த்தைகளால் திட்டி கல்லை எடுத்து கார்த்திக்கை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. சதீஷ்குமாரும் வந்து தகராறில் ஈடுபட்டார். உடனே கார்த்திக் கீழே கிடந்த  கல்லை எடுத்து சதீஷ்குமாரை தாக்கினார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. ரத்தம் கொட்டிய நிலையில் வீட்டிற்கு சென்ற சதீஷ்குமார், துப்பாக்கியை எடுத்து வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.

Tags : Conflict in love affair: 4 arrested for threatening with a gun
× RELATED புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 395...