×

காஞ்சி. கலெக்டர் தலைமையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள், அரசு சாரா நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆலோசனை கேட்டு கலெக்டர் பேசியதாவது: அனைத்து தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களின் பெயர்கள், அலைபேசி எண்கள் ஆகிய விவ ரங்களை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்.

கூட்டத்தில் கலந்து கொள்ளாத, விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்களை இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். இடர்பாடுகளின்போது தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் உறுப்பினர்கள் செய்யவேண்டிய பணி, கடமை என்பது குறித்து பயிற்சி அளிக்கவேண்டும். மாவட்டத்தில் 126 இடங்கள் மிக அதிக பாதிப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்த விவரங்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

மீட்புபணியில் 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 11 துறைகளை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். மிக அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் விவரங்களை பட்டியலிட்டு அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்கவேண்டும். அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர தேவைக்கான மருந்து, உயிர்காக்கும் மருந்து,  கால்நடைகளுக்கு தேவையான மருந்து பொருட்கள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.  

மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

Tags : Kanchi ,Northeast , Kanchi. Consultative meeting on Northeast monsoon reservation work chaired by Collector
× RELATED கருடன் கருணை