சென்னை: வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறக்க கோரி கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோயில்களை திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது, தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும் என கூறியுள்ளது.