×

கோவையில் ஊராட்சிமன்ற வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வி

கோவை: கோவை குருடம்பாளையம் ஊராட்சிமன்ற 9ஆவது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வி அடைந்துள்ளார். குடும்பத்தில் மொத்தம் 5 வாக்குகள் இருக்கும் நிலையில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் கார்த்திக் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன் மூலமாக அவரது குடும்பத்தாரே அவருக்கு வாக்கு செலுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி, குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரேயொரு ஓட்டு வாங்கிய பரிதாபம் நடந்துள்ளது. மனைவி கூட அவருக்கு ஓட்டுப்போடவில்லை. கோவையில் கடந்த 9ம் தேதி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், குருடம்பாளையம் 9வது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், இங்கு போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கார்த்திக், ஒரேயொரு ஓட்டு வாங்கியுள்ளார்.

இங்கு, மொத்தம் 910 வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார். ஒரு ஓட்டு வாங்கிய பாஜ வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என 5 பேர் உள்ளனர். அவரையும் சேர்த்தால் மொத்தம் 6 பேர். இதுதவிர அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஓட்டு மட்டும் வாங்கியது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஒரு ஓட்டும் அவர் போட்டதுதானா? வேறு யாரேனும் தெரியாமல் போட்டனரா? என்று அப்பகுதி மக்கள் நகைச்சுவையாக பேசிக்கொள்கிறார்கள்.

Tags : Karthik ,Pajaga ,Municipality Ward ,Coime , BJP, only one vote, failed
× RELATED போக்சோ சட்டத்தில் வாலிபர் அதிரடி கைது