சென்னை: தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.