கரூர்: கரூரில் வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்பட்ட கடும் கூச்சல் குழப்பம் காரணமாக வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. முகவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்கு எண்ணும் பணியின் வரிசை எண்ணும், வாக்கு எண்ணும் மையத்தில் போடப்பட்டிருந்த மேசை வரிசை எண்ணும் மாறுபட்டிருந்ததால் திமுக, மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாக்கு எண்ணும் பனி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.