×

ஒரு நாள் பாதிப்பு, பலி எண்ணிக்கை 14,313; 181 ஆக குறைவு : இந்தியாவில் 7.5 மாதங்களுக்கு பிறகு குறைந்தது கொரோனா பரவல்!!

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.39 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 14,313 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,85,920ஆக உயர்ந்தது.
* புதிதாக 181 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,50,963 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,579 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,20,057 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,14,900  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 95,89,78,049 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 65,86,092 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


Tags : India , இந்தியா,கொரோனா ,பரவல்
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...