விழுப்புரம்: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு, விழுப்புரம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வராதது குறித்து மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 29ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதனிடையே, எஸ்.பி. கண்ணன் தனது மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததாக கூறப்படுகிறது.