×

வரும் 16ம் தேதி சிறப்பு பொதுக்குழு: பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவிப்பு

சென்னை: வருகிற 16ம் தேதி கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு இணைய வழியில் நடைபெறும். நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பாமகவின் பல்வேறு அணிகளின் அனைத்து நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்பர். சார்பு அமைப்புகளான வ.ச., ச.மு.ச. ஆகியவற்றின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் இப்பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பார்கள். கூட்டத்தில் பங்கேற்பதற்கான இணையதள முகவரி, கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தனித்தனியே அனுப்பப்படும்.

Tags : Special General Committee ,Chairman of ,Fame , Special public meeting on the 16th: Pamaka leader GK Mani's announcement
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்