×

எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுக தொண்டர்கள் சசிகலா பக்கம் செல்ல மாட்டார்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் அதிமுக தொண்டர்கள், சசிகலா பக்கம் செல்ல மாட்டாார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், ‘அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயலலிதா சமாதிக்கு சென்றுவிட்டு, தொண்டர்களை சந்திக்க போவதாக சசிகலா சொல்லியுள்ளார்.

இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இதுபற்றி பேசப்பட்டதா’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஜெயக்குமார் கூறுகையில், சசிகலா 2, 3 கருத்துக்களை சொல்லி இருக்கிறார். ஒன்று, எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் எங்கேயும் போக மாட்டார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ரத்தம் ஓடும் ஒரு தொண்டன் சாகும் வரை அதிமுகவில்தான் இருப்பான். அவன் எங்கேயும் போக மாட்டான். உங்ககிட்ட (சசிகலா) வர மாட்டான்.

2வது, சிறையில் இருந்து வந்தபோது ஜெயலலிதா சமாதிக்கு ஏன் நீங்கள் போகவில்லை? இப்போது அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா வகையிலும் பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களால் புறக்கணிக்கப்பட்ட இவர், இப்போது அங்கே போகிறேன், இங்கே போகிறேன் என்று சொல்கிறார். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் போங்கள், உங்க பக்கம் யாரும் வர மாட்டாங்க’ என்றார்.

Tags : MGR ,Jayalalitha ,Sasila Page ,minister ,Jaykumar , MGR, Jayalalithaa bloodied AIADMK volunteers will not go to Sasikala's side: Former minister Jayakumar
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...