×

காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம் : பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச் சண்டையில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம்!!

ஸ்ரீநகர் :  காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள்  வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் கடந்த 5 நாளில் பொது இடத்தில் அப்பாவி மக்கள் 7 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து ரஜோரி, அனந்த்னாக் மற்றும் பந்துபோரா ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லபட்டனர். இதில் ஒருவன், பொதுமக்களை சுட்டுக்கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய இம்தியாஸ் அகமது தார் ஆவான்.

இந்த நிலையில் மேலும் சில  தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த உளவுதகவலை தொடர்ந்து பூஞ்சின் சூரன்கோட் அதிகார வரம்பில் உள்ள தேரா கி காலி (DKG) கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராணுவ அதிகாரி உள்பட ஐந்து வீரர்கள் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.


Tags : Kashmir ,Poonch , காஷ்மீர் , தீவிரவாதிகள், அட்டூழியம் ,பூஞ்ச்
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...