×

ஹெல்மெட் போடாமல் ஓட்டியதாக ஆட்டோ டிரைவருக்கு ரூ.800அபராதம் விதிப்பு-தஞ்சை போலீஸ் அனுப்பிய எஸ்எம்எஸ்

பேராவூரணி : ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதற்காக ஆட்டோ டிரைவருக்கு தஞ்சை போலீசார் ரூ.800 அபராதம் விதித்ததாக எஸ்எம்எஸ் வந்ததால் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுபவர் நீலகண்டமூர்த்தி. இவரது செல்போனுக்கு தஞ்சாவூர் டிராபிக் போலீசில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், நீங்கள் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ.100 அபராதமும், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனத்தை இயக்கியதற்காக ரூ.700 என மொத்தம் ரூ.800 அபராதம் கட்ட வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கண்டு நீலகண்டமூர்த்தி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நீலகண்டமூர்த்தி கூறுகையில், ஹெல்மெட் போடாததற்கும், இன்சூரன்ஸ் இல்லாமல் ஆட்டோவை இயக்கியதற்கும் ரூ.800 அபராதம் கட்ட வேண்டுமென எஸ்எம்எஸ் வந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்து ஆட்டோ ஓட்டவேண்டும் என சட்டம் இல்லை. அடுத்த ஆண்டு ஜனவரி வரை எனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் உள்ளது. எந்த விதமான வாகன தனிக்கையும் செய்யாமல் ஆட்டோ நம்பரை மட்டும் குறித்து வைத்து அபராதம் விதித்துள்ளனர்.

இதேபோல் பலருக்கும் இதுபோன்ற எஸ்எம்எஸ் வருகிறது. இதுகுறித்து பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விசாரித்ததற்கு உங்களது கணக்கில் ரூ.800 அபராதம் ஏறியுள்ளது. உங்கள் ஆட்டோவிற்கு எப்சி எடுக்கும்போது இந்தபணத்தை கட்டவேண்டும் என்றனர். எந்த தவறும் செய்யாத நான் எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என தெரியவில்லை. மாவட்ட காவல்துறை விசாரணை செய்து அபராதத்திலிருந்து எனது பெயரை நீக்க வேண்டும் என்றார்.

Tags : Tanjore police , Peravurani: Tanjore police have fined an auto driver Rs 800 for driving without a helmet.
× RELATED ஹெல்மெட் போடாமல் ஓட்டியதாக ஆட்டோ...