×

நாமக்கல்லில் தடுப்பூசி செலுத்தி கொண்டோருக்கு மட்டுமே மது விற்பனை!: அறிவிப்பு பலகையால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!!

நாமக்கல்: இரு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று நாமக்கல்லில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என்று விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதனால் மது வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டாஸ்மாக் அதிகாரிகள், மதுகுடிக்க வருவோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். நாமக்கல்லில் இதுவரை சுமார் 2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதாக குறிப்பிட்ட அதிகாரிகள், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாகவே டாஸ்மாக் கடைகளில் அறிவிப்பு பலகை வைத்திருப்பதாக கூறினர்.


Tags : Namakkal , Namakkal, Vaccine, Wine, Wine Lovers
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...