×

கேரளாவில் 4 நாட்கள் கனமழை வெள்ளம் ஓடும் நிலங்கள் சரியும்

திருவனந்தபரம்: கேரளாவில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இம்மாநிலத்துக்கான வானிலை எச்சரிக்கையை ஒன்றிய வானிலை மையம் வெளியிட்டு வருகிறது. இது நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘கேரளாவில்  13ம் தேதி வரை பலத்த மழை பெய்யும். இதனால் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உள்பட 10 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை மழை பெய்யலாம். இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொது மக்கள் இரவு நேரங்களில் மலை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்,’ என்று எச்சரித்துள்ளது.

Tags : Kerala , Landslides in Kerala due to heavy rains for 4 days
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...