×

மெரினா கடலில் குளிக்க தடை: மீறினால் சட்டப்படி நடவடிக்கை

சென்னை: கடலில் இறங்கி குளிக்கவோ விளையாடவோ கூடாது. காவல்துறையின் அறிவுரையை மீறி இறங்கி விளையாடும் குளிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னை, மெரினா கடலில் குளிக்கும்போது அலையில் சிக்கி தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதனால் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக உதவி கமி‌ஷனர் பாஸ்கர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் : சென்னை பெருநகர காவல் துறை, சென்னை மெரினா கடற்கரைக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு காவல்துறையின் வேண்டுகோள்; இப்பகுதி கடல் ஆழமான பகுதி ஆகும். கடல் அலையின் வேகமும் சீற்றமும் வேகமாக உள்ளது.

இப்பகுதியில் ஏற்படும் திடீர் சுழல் அலைகள், கடலில் இறங்கி விளையாடுபவர்கள் குளிப்பவர்களை இழுத்துச் செல்கிறது. இளைஞர்கள் சிலர் நீச்சல் அறிந்தவர்களும் அறியாதவர்களும் இறங்கி விளையாடி உயிர் இழந்துள்ளனர். மேலும் குழந்தைகளை மகிழ்ச்சிக்காக இறங்கி விளையாட அனுமதிக்காதீர்.பெற்றோர்களே, பொதுமக்களே எச்சரிக்கை. உயிர் போக வாய்ப்பு இருப்பதால் குழந்தைகளை இழக்காதீர். அவசர அழைப்புக்கு 9498100024 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். தயவு செய்து யாரும் கடலில் இறங்கி குளிக்கவோ விளையாடவோ வேண்டாம் என  எச்சரிக்கிறோம். காவல்துறை அறிவுரையை மீறி இறங்கி விளையாடும்; குளிக்கும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் இறங்காதீர்கள் அலையில் சிக்கி உயிர் இழக்காதீர். கடல் அலையில் விளையாட்டு வேண்டாம் இளைஞர்களே அலைகளின் தாக்கம் கொடூரமானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Marina Sea , Prohibition of bathing in the Marina Sea: Legal action in case of violation
× RELATED மெரினா கடலில் ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்