×

இறக்குமதியை அதிகரித்து நிலக்கரி தடையில்லாமல் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை: அனல்மின் நிலையங்களில் 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில் வெறும் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே உள்ளதாக தெரிகிறது.

பொருளாதார மந்தநிலையாலும், கொரோனோ பெருந்தொற்றினாலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வினாலும் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் கால விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வருகிறார்கள். மருத்துவமனைகளுக்கும், விவசாயிகளுக்கும் தடையற்ற மின்சாரம் அத்தியாவசியம். எனவே, தமிழக அரசு, தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசிடம் கேட்டுப்பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Tags : Kamal Haasan , The government should increase imports and ensure unrestricted availability of coal: Kamal Haasan insists
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...