×

சிகிச்சைக்கு அழைத்து சென்று கொடூரம் 4 நாள் லாட்ஜில் அடைத்து இளம்பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற இளம் பெண்ணை 4 நாட்களாக லாட்ஜில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்த, அறக்கட்டளை நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் தொவரிமலை பகுதியை சேர்ந்தவர் சம்ஷாத் (24). அந்த பகுதியில் சினேக தானம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை, பண உதவிகளை செய்வது உள்பட சேவைகளை செய்து வருகிறார். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 33 வயதான இளம் பெண்ணும், அவரது மகனும் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது சம்ஷாத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். பின்னர் 2 பேரையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இதையடுத்து பலர் இளம்பெண்ணுக்கு பண உதவி செய்து உள்ளனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளேன். நாம் அங்கு செல்ல வேண்டும் என்று கூறி தாய், மகனை அழைத்து கொண்டு சம்ஷாத் புறப்பட்டார். அவரது நண்பர்களான பசல் மகபூப் (23), செய்பு ரகுமான் (26) ஆகியோரும் உடன் சென்றனர். பின்னர் எர்ணாகுளத்தில் உள்ள லாட்ஜில் இளம்பெண்ணையும், அவரது மகனையும் தங்க வைத்தார். அதன் பிறகு மகனை நைசாக வேறு அறையில் தங்க வைத்தனர்.

அதைத்தொடர்ந்து இளம்பெண்ணுக்கு ஜூசில் மயங்க மருந்து கொடுத்து சம்ஷாத்தும், அவரது நண்பர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்தனர். ெதாடர்ந்து 4 நாட்களாக அடைத்து இதேபோல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இளம்பெண்ணையும், அவரது மகனையும் வீட்டில் கொண்டு போய் விட்டனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகுறித்து புல்பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்ஷாத், பசல் மகபூப், செய்பு ரகுமான் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Treatment, 4 day lodge, teen, rape
× RELATED காதலிக்குமாறு இளம்பெண்ணுக்கு...