சென்னை: அதிமுகவில் சில மாற்றம் செய்ய வேண்டியதும், கட்சியை வளர்க்க வேண்டியதும் அவசியமாக உள்ளது என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவில் இளைஞர்களுக்கு புதிய பதவி, புதிய பொறுப்புகளை கொடுக்க வேண்டும். தலைமையை நம்பி அதிமுக இல்லை, தொண்டர்களை நம்பியே அதிமுக உள்ளது என அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.