×

தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழை நீடிக்கும்: மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!!

சென்னை: தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வருகிற 13ம் தேதி வரை மழை நீடிக்கும. அதன்படி இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்  இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.
அதேபோல் நாளை நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், வருகிற 12 மற்றும் 13ம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும்,  ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

மேலும் தெற்கு வங்க கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Center , Tamil Nadu, Rain, Weather Center, Report
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...