×

வார விடுமுறையை கொண்டாட குளுகுளு கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

கொடைக்கானல்: வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் பிரபல சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு வார விடுமுறை காரணமாக, நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நகர் பகுதி நுழைவிடமான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில், சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நேற்று போக்குவரத்து பாதித்தது. தளர்வுகளில் திறக்கப்பட்ட மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். ஏரியில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும், கொடைக்கானலில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பெய்தது . மாலை இதமான சூழல் நிலவியது. இந்த இரண்டு மாறுபட்ட சூழல்களையும், தூண்பாறை பகுதியில் தவழும் மேகமூட்டங்களையும் சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்தனர். கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் கூடும் சுற்றுலாப்பயணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதுபோல், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதியில்லாததால் பார்க்கிங் வசதியை ேமம்படுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kullu Kodaikanal , Weekend Getaways, Kodaikanal, Kui, Tourists
× RELATED வார விடுமுறையை கொண்டாட: குளுகுளு...