அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் இல்லாததால் பெண் குழந்தை இறந்து விட்டாதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. குன்னத்தை சேர்ந்த மணிமேகலைக்கு வலி ஏற்பட்ட போது சிகிச்சைக்கு செவிலியர், மருத்துவர் வரவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிமேகலைக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இறந்த நிலையில் 2-வதாக பிறந்த குழந்தையும் இறந்துள்ளது.