×

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு காவல் நீட்டிப்பு

சென்னை: கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது, அப்பள்ளி  மாணவிகள்  பாலியல் தொந்தரவு செய்ததாக, சிபிசிஐடி போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில்,  சிபிசிஐடி போலீசார்  3 போக்சோ வழக்குகளை சிவசங்கர்பாபா மீது  பதிவு செய்தனர். பின்னர், அவர் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக புழல் சிறையில்  உள்ளார். இந்நிலையில், மேற்கண்ட பள்ளியில் பெண்களை மானபங்கம் படுத்தியதாக காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்குபதிவு செய்து, சிவசங்கர் பாபாவை கைது செய்து புழல்சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், காவல் நீட்டிப்புக்காக சென்னை புழல் சிறையிலிருந்து போலீசார் அவரை நேற்று  செங்கல்பட்டு மகிளா நீதிபதி (பொறுப்பு) ரீனா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  அவரை வரும்  22ம்தேதி வரை  நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் பலத்த போலீஸ் பதுகாப்புடன் மீண்டும் புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags : Sivashankar Baba , Sexual complaint, Sivashankar Baba, extension of custody
× RELATED பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர்...