×

உபி முதல்வர் யோகிக்கு பதிலடி துடைப்பத்தை மீண்டும் கையில் எடுத்த பிரியங்கா

லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்கிம்பூர் கேரி தாக்குதலில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றார். அப்போது கைது செய்யப்பட்ட அவர் சீதாப்பூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு இருந்த துடைப்பத்தை எடுத்து, அந்த அறையை பிரியங்கா பெருக்கினார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிருபர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் யோகி அளித்த பேட்டியில், `அவர்கள் இதைத்தான் செய்ய வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர்,’ என்று கூறினார்.

இந்நிலையில், லவ் குஷ் நகர் சென்ற பிரியங்கா காந்தி அங்குள்ள தலித் குடியிருப்பு பகுதிக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர், துடைப்பத்தை எடுத்து கொண்டு, `என்னை அவமானப்படுத்தியதன் மூலம், தலித் சகோதர, சகோதரிகளை யோகி அவமானப்படுத்தி உள்ளார். உங்களுடன் சேர்ந்து சுத்தம் செய்யவே வந்தேன். சுத்தம் செய்ய துடைப்பத்தை  எடுப்பது சுய மரியாதை பணியாகும்,’ என்று பதிலடி கொடுத்தார்.

Tags : Priyanka ,UP ,Chief Minister ,Yogi , UP Chief, Yogi, Wipe, Priyanka
× RELATED தேர்தல் நேரத்தில் கெஜ்ரிவால் கைது...