சென்னை: தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதை ஒட்டி வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தி தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமர வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தேவையான அளவுக்கு முகக்கவசம் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.