வேலூர்: ஆந்திராவில் பெய்துவரும் கனமழையால் வேலூர் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கலவகுணடா அணையில் இருந்து 2,500 கன அடிநீர் வெளியேறி வருவதால் வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொன்னையாற்று கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.