×

ஊட்டி - கூடலூர் சாலையோரங்களில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பிங்கர்போஸ்ட் முதல் தலைகுந்தா வரை பல்வேறு பகுதிகளிலும், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் முதல் கூடலூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பல இடங்களில் சாலையில் பாலங்கள் கட்டும் பணி மற்றும் கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணியும், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளிலும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.

ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து தலைகுந்தா வரையுள்ள சாலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் கான்கிரீட் கலவை கொண்டு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, தலைகுந்தா பகுதியில் புதிதாக பாலம் கட்டப்பட்ட இடத்திலும், சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Ooty - Cuddalore , Ooty: Road widening from Ooty to Cuddalore at various places from Pinkerpost to Talakunda
× RELATED ஊட்டி - கூடலூர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்