டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.50 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3,39,15,569ஆக உயர்ந்தது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 21,257 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,39,15,569ஆக உயர்ந்தது.
* புதிதாக 271 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,50,127 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 24963 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33225221 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 240221 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் இதுவரை 93,17,17,191 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
* நேற்று ஒரு நாள் மட்டும் 50,17,753 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.