×

வட மாநில தொழிலாளியை தாக்கி செல்போன் பறிப்பு

புழல்: செங்குன்றம் அருகே கிரான்ட்லைன் கிராமத்தில் தனியார் பிளாஸ்டிக் கம்பெனி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்  தங்கியிருந்து வேலை பார்க்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் கம்பெனியையொட்டியுள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் தீபக்(24) என்பவரின் 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பியோட முயன்றனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த  தீபக், அவர்களை விரட்டி பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த  அவர்கள், கத்தியால் தீபக்கை வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த தீபக்கை, சக ஊழியர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.


Tags : North , Northern State, worker, cell phone flush
× RELATED வடகிழக்கு மாநில மக்களை மோடி அரசு...