×

தான்சானியா எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு  வழங்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. தான்சானியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.  அகதிகள் பிரச்னை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இவர் எழுதியுள்ளதற்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. இளம் வயதில் இருந்து பல நாவல்களை எழுதி வரும் அப்துல் ரசாக் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

Tags : Tanzania, Writer, Literature, Nobel Prize
× RELATED பிரேசிலில் வெள்ளப்பெருக்கில்...