தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், காயாமொழி வள்ளுவர்நகரைச் சேர்ந்த திருமால்(31), திருச்செந்தூர் குதிரைமொழி கரிசன்விளையைச் சேர்ந்த கணேசன்(53), அவரது மனைவி பார்வதி(51) ஆகியோர் காயாமொழியை சேர்ந்த ரமேஷிடம்(31) அறிமுகமாகி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 19.11.2020ல் ரூ.2 லட்சம் வாங்கி உள்ளனர். தொடர்ந்து 21.11.2020 அன்று மீண்டும் ரூ.50 ஆயிரம் பெற்று கொண்டு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இபிஎஸ், கலெக்டர் ஆகியோரது போலி கையெழுத்துகளுடன் அரசு வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். அதுபோலி என தெரிந்து பணத்தை திரும்ப கேட்டதற்கு தர முடியாது என்று கூறியுள்ளனர். இதேபோன்று வேறு சிலரிடமும் ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து திருமால், கணேசன், அவரது மனைவி பார்வதி ஆகிய 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.