×

பாஜகவின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு, எச். ராஜா நியமனம் : பொன். ராதா கிருஷ்ணனுக்கும் முக்கிய பதவி!!

டெல்லி : பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த பதவிக்கு அக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  புதிய தேசிய செயற்குழு உறுப்பினர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக குஷ்பு மற்றும் எச். ராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் தேசிய தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர்.இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த அறிவிப்பை தொடர்ந்து  இவர்களுக்கு பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Tags : Khushboo ,H.S. King ,Radha Krishnan , பாரதிய ஜனதா கட்சி,குஷ்பு, எச். ராஜா
× RELATED பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே...