வாஷிங்டன்: 2020ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பால் உலகம் முழுவதும் மேலும் 10 கோடி பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் மட்டுமே 2020ம் ஆண்டில் 6.2 கோடியிலிருந்து 7.1 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தெற்காசியாவில் 4.8 கோடியிலிருந்து 5.9 கோடி மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.